புதன், 13 ஜூன், 2012

மீண்டுமொரு யாசிப்பு.


ஞாபகங்களில்
ஒரு மொட்டின் இதழ்விரிப்பாய்
சில்லென மலர்கிறது உன் முகம்.

பிரியதெரிந்த மனதால்
மறக்க தெரிவதில்லை.
உயிர் நிறைய
உறைந்துகிடக்கிறது சிநேகம்.

வாலிபம் முழுதும்
சௌந்தர்யங்கள் தூவிய என் அன்பே,
இடைவெளிகளில்
நாம் சந்தித்த பெரும் கோடைகள்
காயப்படுத்தியதாய் தோனவில்லையெனக்கு,
சிலிர்க்கவைத்த பழைய மழையின்
தூவான,தூறல்களின்முன்.

நிமிர்ந்த மரங்கள் நிறைந்த
பள்ளிச்சாலையில் நீ ..,
குனிந்தபடி குவிந்துநடந்ததும்
நானுன்னை தொடர்ந்து கடந்ததும்
ஈரம் காயாமல் இன்னும்.