செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

தற்கொலைக்கு சற்றுமுன்.


அவனது விதியை அவளும்
அவளது விதியை அவனும்
சோடி சேர்த்து வைத்திருந்தார்கள்
ஒரு வாழ்க்கையாய் திரித்து
காலத்திடம் ஒப்படைக்கவென்று

ஆபரணங்கள் விருப்பமானவர்களுக்கு
தட்டான்களை பிடிப்பதுபோல்
கொல்லர்களை பிடிப்பதில்லை

இரும்படிப்பவனிடமிருக்கும் சம்மாட்டியும்
பொன் செய்பவனிடமுள்ள மஞ்சடி தராசும்
பொருந்தி வருவதில்தான்
சிக்கல்கள் சீர்தூக்குகின்றன
தும்பிகளை விரும்பிக் கொண்டிருப்பவர்கள்
வணணாத்திகளை வெறுக்கிறார்கள்

இறைவனின் விதிப்படியானது
மனிதர்களின் பாத்திரங்கள்
என்பதை மறந்து
ஒருவரின் வாழ்வை
நிர்ணயிப்பதில் பங்கற்றவர்கள்
சாவை தீர்மானிப்பதில் முன் நிற்கிறார்கள்

இருவரின் கனவுகளையும்
எரித்துவிட சுடலை
தயாராகவிருந்த நாளொன்றில்
இருவரின் விதியையும்
குடும்பமும்,ஊரும்சேர
இருபக்கமும் முறுக்கி
திரித்து விடுகின்றனர்
இருவருக்கும் பொருந்தக் கூடிய
தூக்கு கயிறினை
அப்போதிருந்து
அவ்விடத்தில் வெளிவந்து தொங்கின

நிறைய நாக்குகள்!

புதன், 11 பிப்ரவரி, 2015





















எப்போதும் பொழிகின்ற மழையாயிரு.


உலரா கேசத்தின்
இயற்கை வாசத்தில்
ஸ்பரிசத்தின் ஈரலிப்புடன்
எனது காலையை எழுப்பிவிடுகிறாய்

சுவை ரசம் அடங்கிய
சூடான ஒரு கோப்பை தேனீருடன்
குரல்வழி தாவி
என் செவி ஏகி விடுகிறது
குளிர் பொதிந்த மென்மையான
உன் இனிமையின் அழைப்பு

இதங்களின் விரல்கள் ரிதங்களை மீட்ட
போர்வை விலக
சூரிய தரிசனம்

பல்லின பட்சிகளின் பாடு பொருளுடன்
ஒரு மழைக்கால ஒத்திகையேந்தி
மன வெளியில் தொடக்கிவைக்கப் படுகிறது
இன்றின் வைகறை இன்புற

அது புலர்வில் முளைத்து
மாலை,பின்னிரவு தாண்டியும்
ஆச்சரியங்களால் பூச்சொரிகின்றன



சந்தோஷசத்தின் பூர்வீகம்
வாழ்க்கையின் அழகை
ஆளங்களால் அடையாளப் படுத்த
உனதன்பின் ஒவ்வொரு துளியும் சேர
நிரம்பி வழிகிறது என் புலம்


பாசத்தின் பன்பலைகளில்
அரவணைப்பின் அனுசரணையுடன்
நகர்ந்து செல்லும் நாளிலெல்லாம்  
உன்னிடமிருந்து......,
கையேந்துவதும், மடியேந்துவதும்
இது ஒன்றைத்தான் உயிரே

மகிழ்ச்சி ததும்ப சுளித்து விளையாட
நீ வளர்த்த மீன்களுடன் சேர்ந்து
என் குளம் வற்றிவிடும் படி
என்றைக்கும் கோடையாகி விடாதே.



வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

  


பொங்கல் கவிதை போட்டி 2015” எழுத்து தளத்தில்.


(ஆறுதல் பரிசு வென்ற எனது படைப்பு.)


இப்படி நாம் காதலிப்போம்.



கோபுரத்து கலசமென குவலயத்தின் விலாசமென
அன்னாந்து ஊர் பார்க்க ஆளாக்கி உயர்த்தியோரை
கண்ணாக நாம் மதித்து கண்ணியம் காக்கையிலே
புண்ணிய வாழ்வாகி போகாதோ நம் வாழ்வு?

எண்ணிய படி வாழ்வு ஈடேற்றம் கண்டுவிட
அந்நியர் ஆக்காது உறவுகளை வென்றுநட-என்று

இந்நாளில் சிறப்பித்து இதயத்தால் மகிழ்வித்து
இப்படி நாம் காதலிபோம் இன்புற தான் ஆதரிப்போம்

சாதி,நிறம் என்னும் சர்சையுள்ள வாதங்கள்
பாதிப்பை ஏற்படுத்தும் பகட்டு வேதங்கள்-மனதால்
ஓதி ஒழுகாமல் உண்மைக்கு தோள் கொடுப்போம்
நீதி வழுவாமல் நேர்மைக்கு வாளெடுப்போம்

கூட்டுக் குடும்பமென குதூகலிப்பில் வாழுகிற
பாட்டுக்கு ஈடாக பாரிலுண்டா ஒரு வாழ்வு?
மனைக்கு ஒருத்தியினை நல்லாளாய்-பெற்றோர்
மனசின் விருப்புணர்ந்து நடக்க உள்ளளாய்

மனையாளாய் அழைத்து வந்து மகிழ்வு ஒளியேற்றி
வினையாளாய் திழைத்து விசித்திரங்கள் படைத்து
இல்லம் துலங்க வைத்து நல்லன்பு மிகைத்தோங்க
இணைப்பு வாழ்வின் பால் இப்படி நாம் காதலிபோம்

கற்கும் வயதினிலே காதலெனும் மாயையிலே
வீழ்ந்து மனமுருகி வெதும்பி வாழாமல்
மணமான பின்னாடி மனைவியரை காதலிப்போம்
உருவான தாய் மண்ணை உயிராக நாம் மதிப்போம்.