புதன், 25 ஜூலை, 2012

அரசனின் தோற்றமும்,மறைவும்.



 இரண்டு அசிங்கங்களில் ஊறித்தெளிந்த
ஒரு துளி திரண்டு ஊதிப்பெருக்க
விசித்திரங்களற்ற சாதாரணமான
பிண்டமொன்றிலிருந்துதான்
உறுப்புருப்பெற்று வெளியேறி
பூமியின் மடியில் வந்து விழுந்தான்.

பின் வேகமாக வழர்ந்து
அதிகாரத்தை கைப்பிடிக்குள் நிறுத்தி
கோலோச்ச தொடங்கியவன்
இத்தனை மோசமான பின்விளைவுகளை
தோற்றுவிப்பானென்று யாரும் அறிந்திருக்கவில்லை.

ஒரு கனவுபோல் தோன்றி
கலைந்திருக்க வேண்டியது
இன்று ஊரே வெறுக்கும் விபரீதமாகிற்று

சமுத்திரங்களை பருக எத்தனிக்கிற பேராசை,
குடிகெடுத்து வாழும் முனைப்புடனான
தயாறெடுத்தல் நிறைந்த கர்வம்,
எதிலும் அடங்காத ஒரு தாகம் என
மனித பன்புகளை அலக்களித்துச்செல்லும் சுயம்
வெறுப்பை மேலோங்கசெய்தது மக்களிடை.

இத்தனை நாளும் இருந்த கெடு முடிய
பலத்தை அத்து மீறி பாவித்த குற்றத்திற்காக
அரசனுக்கான தகுதியை உருவிஎடுக்க
ஊர்கள் திரண்டன
அதிகரித்துப்போன நெருக்கடிகளிலிருந்து
தன் இருப்பை தக்கவைக்க எடுத்த பிரயத்தனங்கள்
தோல்வியுற தூக்கி எறியப்பட்டான்.
இனி எப்பொழுதும் மீண்டெழ முடியாத ஆளத்தில்.