**************************
அடர்ந்த இடர் காடு
சுற்றி வனமாக
நீ விட்டுச்சென்ற தனிமை
பெருங் கோடைக்குள்
என்னை தள்ளிவிட்டது
மழையென வந்து போனாலும்
இனி..
துளிர்த்தலுக்கான சாத்தியம்
இல்லை இந்த கொடியில்
அன்புக்கான என் ஏக்கத்தில்
நீ பாய்ச்சிய வேல்
ஆணிவேரையே அசைத்து விட்டது
சூடி மகிழ்விக்க பூக்களோ
நுகர்ந்து இன்புற வாசமோ அற்று
மலடும் இல்லை குருடும் இல்லை
என்றாகிற்று ஜீவிதம்
கை தட்டல்களுக்காகவோ,
ஆடி அசர வைக்கவோ
என்னிடம் மகுடிகள் இல்லை
உன் எதிர் பார்ப்புகளின் தளங்களை
நான் இளந்து வெகு நாட்களாச்சு
இருப்பை பறை சாற்ற
வெறுமனே அசைவில்
ஒளித் துணுக்குகளை விசுறும்
ஒரு மின்மினியாய்
வாழ்க்கை வெளியில்
வசித்து விட்டுப் போகிறேன்
நீ விட்டுச் சென்ற வெற்றிடத்தில்!