சனி, 25 ஆகஸ்ட், 2012

கூத்தாடிகளின் காலம்.




பாலொழுக,தேனொழுகப் பேசி
பாமரரை ஏமாற்றும் லூசி
கூட்டமொன்று புறப்பட்ட காலம்
கூத்தடிப்பார் பாரிருந்து கோலம்
யாருமில்லை இவரைப்போல் என்று
யாசகனைப்போல் வாசல் நின்று
கேட்டிடுவார் தொண்டர்கள் பிச்சை
கேவலத்தை பார்க்க இயலா கொச்சை

பத்தினியின் பிள்ளை போல் வேஷம்
பாமரன் மேல் கொள்வார்கள் நேசம்
முதிர்ந்தவர்கள் கண்டால் ஓர் பாசம்-தேர்தல்
முடிந்த பின்னால் எல்லாமே நாசம்
மண்குதிரை ஏறியிவர் பயணம் 
மடத்தனமாய் ஆனதனால் கவனம்
வாக்குரிமை உள்ளவர்காள் தருணம்
வழங்கிடுவீர் நல்ல பதில் சகுனம்

வாயிலில்லை நல்லதொரு சுத்தம்
வம்பளப்பார் எதிர்த்தவனை நித்தம்
தேவிடியாள் பெற்ற பிள்ளை போல
தெருவில் நின்று கூத்தடிப்பதால
கட்சியதன் நற்பெயரோ கெடும்
கடைசியிலே தோல்வி கையை சுடும்
நிலைமைதான் அவர்களுக்கு வரம்
நினைவில் வை தான் வளரும் மரம்.