சனி, 7 ஜூலை, 2012


உன் அழகில் தொலையும் நான்.



இயற்கையாய் 
எனக்குள் எப்படி பரப்பினாய்
பார்த்தவுடன் பற்றிக்கொல்லும் தீயை?

அழகான அவஸ்த்தை
நீ தந்ததால் நினைத்துப்பார்க்கிறேன்.
என் வாலிபம் முழுவதும் உன்னை பார்த்தபின்
வைக்கோல்போராய்
கண்களால் மூட்டப்பட்டு 
இதயம் வரை எரிகிறது.

அழகே உன் மௌனத்தைவிட
சூனியம் மகத்தானது
சாவதானால் கூட ஒருமுறைதான் சாத்தியம்,
இப்போது இது வாழ்க்கைமுழுக்க வதை
இதுதான் இன்றைய சத்தியம்.

உனக்கென்ன எழிலால் மிழிர்ந்து தினம் 
பூமிக்கு புனிதம் சேர்க்கிறாய்
உன்னால் ஆலிசப்பட்டுப்போனது
என் ஆயுழ்தான்.