புதன், 12 டிசம்பர், 2012

கிராமத்து காட்சி பல..கண்டேன்!

நாற்று வழி விளை நிலங்கள்
சோலை கண்டேன்
காற்று வழி நறுமணங்கள்
லீலை கண்டேன்

ஊற்று வழி நீர் வழிய
ஓடை கண்டேன்
சேற்று வழி கதிர் விளைய
வாடை கண்டேன்

பாட்டு மொழி புலவனைப்போல்
உழவன் கண்டேன்
மேட்டு வெளி வயல் நிறைய
பகலோன் கண்டேன்

 காட்டுமரம்  வழர்முறையின்
பழக்கம் கண்டேன்
வீட்டின் உள்ளே மாதர்களின்
ஒழுக்கம் கண்டேன்

வாட்டுகிற பஞ்சத்தை
ஓட்டுகிற படைகள் கண்டேன்
தூற்றுகிற நெஞ்சத்தை
போற்றுகிற முறைகள் கண்டேன்.

குறை-சாட்டுகிற மக்களற்ற
குக்கிராமம் என்பேன்
பறை-வேட்டொலிக்க சொல்வேன்
இது பொற்கிராமம் என்பேன்