வெள்ளி, 6 ஜூலை, 2012

பேய் பிடித்த மனசு.

அபிமானத்தை இழந்தபடி
நம்மிடத்தில் ஊத்தை பிடித்துகிடக்கும்
மனசை களற்றி கழுவவேண்டும்
உண்மையில் இது வேடிக்கையாய் இருக்கலாம்
ஆனால்;உண்மை அதுதான்.

கொள்கைக்கு முன்னால் சிலநேரம்-மனசு
குருடாகிவிடுகிறது.
இந்தச்சனியன் இப்படி செய்துவிட்டதே என்று
இடிந்து விழ்ந்தும் இருக்கிறோம்.

கோபிக்க வேண்டாம் யாரும்
கொச்சைப்படுத்தி மனசை குடைகிறேன் என்று.
இதுதான் இறுதிமுறை
என்ற நேர்த்தியுடன்தான்
ஒவ்வொருமுறையும் ஆரம்பிக்கப்படுகிறது.
ஆனால்;அதற்கான சாத்தியங்களை தோற்கடித்து
ஏதாவதோர் கூவத்தில் குதித்து விடுகிறது சனியன்.

சில நேரம் பேய்பிடித்ததுபோல்
அதன் இஸ்டத்துக்கு ஆடுது
மூளைகெட்டமனசின்
மூதாதைகள் குரங்கின் வழித்தோன்றலாக
இருக்கவேண்டும் என எண்ணத்தோன்றுகிறது.