ங்கொய்....,ங்கொய்.
நுளம்புகளின் தொணதொணப்பு
அருச்சனியத்தை உண்டாக்குகின்றன.
"சனியன் புடிச்சதுகள்"
பளாரென்று செவியில் ஒரு அறை
வலி எனக்கு
நுளம்பைக்கொன்ற திருப்தி மனசுக்கு
என்ன வாழ்க்கையிது அலுப்புதட்டியது.
"நேரம் போகுது படுறப்பா"
கட்டிலிடுக்குகளிலிருந்து...,
மூட்டைகள் சொன்னது.