சனி, 2 ஜூன், 2012

பாதுகாப்பு வலயத்திற்குள் .

ங்கொய்....,ங்கொய்.

நுளம்புகளின் தொணதொணப்பு

அருச்சனியத்தை உண்டாக்குகின்றன.
"சனியன் புடிச்சதுகள்"
பளாரென்று செவியில் ஒரு அறை
வலி எனக்கு
நுளம்பைக்கொன்ற திருப்தி மனசுக்கு

இனி செரிவராது வலைகட்டணும்.
என்ன வாழ்க்கையிது அலுப்புதட்டியது.

"நேரம் போகுது படுறப்பா"
கட்டிலிடுக்குகளிலிருந்து...,
மூட்டைகள் சொன்னது.