புதன், 30 மே, 2012

வெளவால்களின் உலகம்.

விசித்திரமான பிறப்போன்றை பெற்ற
மமதையில்
ஒரு தலைகீழ் தவம்.
எதுவும் தெரியும் என்கிற
ஒன்றும் அறியா கண் மூடித்தனம்.
நிசிகளின் மௌனம் கிழித்து
பிரளயங்களை தோற்றுவிக்கிற
குணாதிசயம்,
இன்றைய மனிதர்களுக்கும்
இருக்கிறது நிறையவே! 

ஒரு தாயின் அழுகுரல் ....!



உறவின்பெரும் தகிப்பில் களிப்பூட்டி நீ சிரித்தாய் 
 .............,உயிர் பூவாய் என்வாசலில்
முற்றத்து பூஞ்செடிகளை கவனிப்பதில்லை நீ ..,வந்தபின்
மடிகிடத்தி நான் மகிழ, மடி கிடந்து நீ உழல -என்
துயில் துரத்தி விசிறினேன் 
கொசு ,நுளம்பு உன்னை குத்தாதிருக்க 

தந்தையின் அகாலப்பிரிவு 
அவலத்தின் பின் -தனிமையில் உயிர் தடவி 
பருகி நெகிழ்ந்தேன் உன்னை
என் அந்திமத்தை தாங்கிப்பிடிப்பாய் என்றெண்ணி

என் கனவுகள் ,ஆசைகள் சிதைந்தது
நீ பிடித்தாய் உனக்கான துணையை 
என்னை நழுவ விட்டு ,விட்டு 
உன்னை ஒரு அதிதியாய் வழர்த்து 
அகதியாய் போயின்று தனித்துக்கிடக்கின்றேன் 
தாவரிப்பின்றி

உயிரில் பாதி நீ என்று ஊர் மெச்ச வழர்த்தேன் 
பெயர் வைத்த எனக்கு பிடரியில் அடித்துவிட்டாய் 
கருப்பை தொடங்கி நேற்றைய நிமிஷம் வரைக்கும் 
இரு சகாப்தங்களில் ஒரு சராசரி மனிதனாய் நீ
தாய்மையின் விலையறியா 
மனித பதராய் போன மகனே உன் பின்புலம் பற்றி 
முன்னமே தெரிந்திருப்பின்
தரித்த கணமே கிள்ளிஎறிந்திருப்பேன் 
 !ஒரு உண்ணிபோல் உன்னை


முதிர் கன்னியின் ஏக்கம் .




மாற்றி ,மாற்றி விசுக்கப்படும் 
சாட்டையின் விசையில் வலியின் ஈரம்........,
எதிர்வு கூறுவதும் ,
நம்பி ஏமாறுவதுமான
வானிலை அறிக்கை வழக்கம் போல்
எனது வாழ்வும்  கையாளப்படுவதுதான்
இதில் கவலைக்குரியது ....!
நம்பிக்கையின் வேரை
பிடுங்கி எறிந்துவிட்டது காலம் 
எனது சொப்பனங்களில் 
வாழ்வு பற்றிய கனவே இனி வராதே...!!
எதிர் பார்ப்புகளில் பயணித்து 
இடிந்து விழ ,எழ 
இதயத்தி கால்களால் இயலவில்லை 
என் இரவுகள் வெறுமையாகவே ...,
ஏழ்மையின் அந்தப்புரத்தில் 
காத்திருப்பின் வெகுளித்தனங்களுடன்
ஆயுளின் அரைவாசிக்குமேல் 
......................................................,
இனி என்ன.. மரணம் தானே 
என் வாசலுக்கு எப்போதுவேண்டுமானாலும் 
அவை வந்து விட்டு போகட்டும் 
அவனைத்தவிர !