சனி, 28 ஜூலை, 2012

புது விதி எழுது நீ.


உயிரை பிய்த்து தின்னும் சோகம்
அரங்கேறுகிறது நமக்கு அண்மையில்
கண்களை குருடாகவும்,
மனமதை மலடாகவும்
வைத்திருப்பதா வாழ்க்கையென்பது
சாமானியனாய் இருக்கும் ஈமானியனே
சிந்திப்பதற்கு கூடவா சில நொடி இல்லை?

புத்தனை புகழ்ந்தபடி
காவிக்கறையில் காட்டேரிகளாய்
காடுகளோடலையும் பேய்களின் பிடியில்
புனிதம் மிகு பூக்கள்
வள்லூறுகளின் வல்லுறவுக்கு
நிர்ப்பந்திக்கப்பட்டு நிவாரணமின்றி
அனுதாப்படக்கூட ஆளற்று
சரித்திரம் சுமந்த ஒரு சமுகம்
சரணகெதியடைந்து சாவின் மடியில்.

பிணம் பார்த்து பிரமித்ததும்
மரணம் கண்டு மௌனித்ததும் போதும்
வெகுண்டெழு வேங்கையென
அறிவை தொழினுட்பத்தோடு
தொடர்பு படுத்து
உலகின் புலன்களுக்கு உனது கருத்தை
பயப்படாமல் சேர்க்க ஒரு பாதை செய்.

ஐநா என்ன அதையும் தாண்டி
போக முடியும் இந்த
புதிய தலைமுறையால்
சும்மா இருப்பது சுகம் என்றிராமல்
ஆளக்கால்பதி அதிரடி முடிவெடு
மியன்மார் முஸ்லிம்களுக்காக
இறைவனை இரஞ்சு
தொழுகையில் தினம் துதி
தொழினுட்பத்தால் புது விதி
எழுது நீ இயலும் உன்னால்.