புதன், 22 ஏப்ரல், 2015
உடையும் கடல்!
அழகான முற்றத்தில்
குரோட்டன் செடியுடன் வளர்ந்து
சமீபமாக இருந்த சந்தோசம்தான்
பாறைகள் முளைத்திருக்கும்
நேற்றைய காலத்தின் தெருவழியே..
பருவங்கள் என்ற பதங்களுடன்
கடந்து போனது என்னை.
அவர்கள் குருடாய் இருந்ததால்
அது போகட்டும் என்று விட்டு விட்டேன்
இன்று நானாக திரும்புகிறேன்
மயானம் இருக்கும்
இப்போதைய சாலைக்கு.
ஆமணக்கும்,சப்பாத்து கள்ளியும்
செறிந்த திடலில்.....,
நானும் ஒண்ட வேண்டியாயிற்று.
சுவர்க்கம்,நரகம் கேள்வி ,கணக்கு
எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்கள்
மரணிப்பதற்கு மட்டும்
இங்கு மனிதர்கள் தயாரில்லை.
மயானத்திற்கு செல்ல
விருப்பமற்றவர்களின்
பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப் படுகின்ற
பின்னிரவொன்றில்...........,
வானவெளி எங்கும்
என் எதிர்பார்ப்பை கூட்டி,கழித்து
பெருக்குகின்றன கரும் முகில்கள்
மண்பற்றி,வேர்நிறுவி,கிளைவிட்டு
நிழல் விரித்து
இலை தரித்து,பூ ஈன்று காய்விட்டு
பழுத்துவிழ என
ஒரு சாக்கு கனவுகள் இருக்க
பாறை பெருவெளியில்
முள்சூழ முளைத்திருக்கும்
கிளையற்ற கள்ளிகளுடன் கள்ளியாய்
நிலையற்ற என் வாழ்வும்
காற்றும் முனைவதில்லை சீண்ட..
தனித்தலைந்து
வாலிப கரையில்
வாடியிருக்கும் என் அருகே
இடி வெட்டி,மின் கொட்டி
வானக் கூரை வழியிறங்கி
அன்மித்து உடைந்து
கலக்கும் கடலை
மழை என்கின்றன
கல்லாய் இறுகி இருக்கும்
மண்ணாங் கட்டி மனசுகள்!
தவற விட்டவைகள்.
தூரத்தில் நின்ற துயில்கருவறையில் வைத்து விட்டு
“கபுறறைக்கு”(கல்லறைக்கு) போன வாப்பா
தவழ்ந்து புரண்டு
தாவி உறங்கிய தாய்மடி
தாவி உறங்கிய தாய்மடி
பாலியம் காணாமல் பாடையேறிய
பள்ளித்தோழி
பள்ளித்தோழி
இடம்மாற்றம் கிடைத்த பின்
இதுவரை சந்தியா ஆரம்ப ஆசான்
இதுவரை சந்தியா ஆரம்ப ஆசான்
பட்டினியாய் படுத்த இரவுகளில்
அருகிருந்து அனுபவிக்க கிடைக்காத
என் குழந்தைகளின் குறும்பு
என் குழந்தைகளின் குறும்பு
நனைய காத்திருந்த மழை
பொழியாமல் போன தருணம்
பொழியாமல் போன தருணம்
நகரப் பேரூந்து பயணத்தில்
என் மணிபர்சுடன் இறங்கிப் போன
பக்கத்து இருக்கை பயணி
என் மணிபர்சுடன் இறங்கிப் போன
பக்கத்து இருக்கை பயணி
அநாதரவாக நின்றபோது
ஆதரித்த முன் அனுபவம் அற்ற முகம்
ஆதரித்த முன் அனுபவம் அற்ற முகம்
வாழ்கை என்று வந்தபின்
இறக்கை கட்டிப் பறந்த இருபது வருடங்கள்
இறக்கை கட்டிப் பறந்த இருபது வருடங்கள்
இன்னும்......,
சேமிக்க முடியாமல் செலவுபோன
சில்லறைகள்
என் “கபுறறை”(கல்லறை) வரைக்கும் நீளும்
கவலை சிலுவைகளாய்!
சேமிக்க முடியாமல் செலவுபோன
சில்லறைகள்
என் “கபுறறை”(கல்லறை) வரைக்கும் நீளும்
கவலை சிலுவைகளாய்!
ஞாயிறு, 19 ஏப்ரல், 2015
இடிவிழுந்த ஒரு காலை!
புள்ளினங்களின்புனிதநீராட்டு விழாவுடன்ஆரம்பித்து இன்முகத்தோடுஅழைத்துவந்து வாசலில் விட்டஅதிகாலைவிடிகாலையாகி,வெயில் காலையாகிய போதுதான்உருக்குலைந்துஅடையாளம் காணமுடியாதபடிஇடர் காலையாய் பேர்இடி விழுந்து நின்றது என் தெருவில்வாலி என்ற பெருங்கவிஞன்வலிகளுக்கிடையில் வந்துபோனான்“காதலில் வெற்றி கண்டால்கழுத்தில் கயிறு தொங்கும்காதலில் தோல்வி கண்டால்கயிற்றில் கழுத்து தொங்கும்”ஆனால் இங்குவாழ்க்கைக்குள் வந்துவாரிசுகள் கண்டபின்புஉள்ளிருக்கும் சந்தேக குப்பைகளைவெளியே பெருக்க முடியாமல்வாசலை விட்டு சில வீடுகளேவாஸ்த்து சரியில்லை என்றுபூமிக்குள் புதைந்து விடுகின்றனசாலையோரங்களைஅழகுபடுத்திய மரங்களை அணுகிபூக்களை ஒவ்வொன்றாய்வினயமாய் விசாரித்தேன்காலைக்கு நேர்ந்த அபத்தம் பற்றிஅறியும் முனைப்பாய்யாரிடமும் ஊகத்தை தவிரஉண்மை இருக்கவில்லைகயிற்றுக்கும்,கழுத்துக்கும்தெரிந்த ரகசியத்தைபடித்துப் பார்க்கும் பக்குவம்முகமூடிகள் தரித்த மனிதமுகங்களுக்குதெளிவில்லை என்ற போதுஇடி இரண்டாவது முறையாய்இறங்கியது அத்தெருவில்இறகுகளை உதிர்த்துவிட்டுஉயிரை காவுகொடுத்திருக்கிறதுஅந்த வெண்கொக்குஅதன் குளத்தில் ஈரமில்லைசேறும் இறுக வெறிச்சோடிற்றுமதம் வெடிக்கபூமியின் மார்பு தவழ்ந்துகாற்றில் அசைகின்றன அதன் இறகுகள்ஊரின் விழிகளெல்லாம்கரைந்தபடி இறங்கி நடந்தனஇடிவிழுந்த காலையில்நான் வாழை சுருட்டிக்கொண்டுஒரு பூனையாய் இருந்தேன்எனது மலத்தை மறைத்தபடிகண்களை மூடிவிட்டால்உலகமே இருளென்றஇறுமாப்பு இன்னும் இருக்கு....அடுத்தமுறை இடிவந்தால்அவனில் விழும் என்றஒரு பாட்டியின் சாபம்என்னை கடந்து செல்கிறது
(அன்மையில் தற்கொலை செய்துகொண்டதாக தவறிப்போன ஒரு தங்கைக்காய்.)
ரத்த சரித்திரம்.
தெருக்கோடியில் வளர கூட
தெளிவு முளைக்காத என்னை
உன் தொப்புள் கொடியில்
மலர வைத்தாயே
மகிழ்கிறேன் தாயே?
அதனால்தான் சொல்கிறேன்
நீ ஆதாரம்,நான் சேதாரம்
.........................................,
ஆயிரம் தான் இருந்தாலும் அம்மா
உனக்கு முன்னால் நான்
ஒன்றுமில்லை வெறும் சும்மா
கதையாய் சொல்ல நீ
முத்த காவியமல்ல
சதையாய் உள்ள
உயிர் சாசனம்
சிறு விதையையும் சீராக்கி
தானியமாய் தருவிப்பவள்
நீ வளர்க்கும் வயல்வெளி
நான் உலரும் பனித்துளி
நீ மலை முகடு
நான் இலைச் சுவடு
காலமெல்லாம்
உயிரூட்டி
நீ வேராக
இருக்கின்றாய்
ஆனால் நான்
உன் காலடியில்
ஒருநொடி சருகாக
கிடக்க கூட
சம்மதிப்பதில்லை
ஆறாத காயத்தையும்,
அழ வைக்கும் கவலையையும்
பிறப்பிலிருந்தே நான் உனக்கு
பிரதிபலன்
ஆக்கிவிட்டேன்
கைமாறு எதிர்பாரா
கருணை ஆனாய்
காலத்தின் முன்
நிற்க
பொருள் நீயானாய்
நீ புழக்கத்தில் இருக்கும்
நாணயம்
நான் பழக்கத்தில்
வெறுக்கும்
செல்லா காசு
ஆயினும் என்னை
பொற்காசு
புதையலாய் புகழ்கிறாய்
உயிரூட்டி,உயிரூட்டி
மகிழ்கிறாய்
அதனால்தான்
சொல்கிறேன்
நீ ஆதாரம்,நான் சேதாரம்
ஆயிரம் தான்
இருந்தாலும் அம்மா
உனக்கு முன்னால்
நான்
ஒன்றுமில்லை
வெறும் சும்மா
அம்மா நான்
உனக்கு வலிகள் சேர்த்த
சுத்த தரித்திரம்
அம்மா நீ
எனக்கு வரமாய் வாய்த்த
ரத்த சரித்திரம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)