திங்கள், 17 ஜூன், 2013

தலை எழுத்து தந்தவன்.



வாசிக்கும் நாவில்
என் பெயரின்
முதல் எழுத்தை முன் மொழிய
தலை எழுத்து தந்த
தலை எழுத்து நீ

சிந்தை நிறைந்திருக்கும் தந்தையே
நீ
வீ ரியமுள்ள விருட்சம்
தாய் மண்ணில் விதை தூவினாய்
தளிராய் நான் முளைக்க மர மாக்கினாய்
எனது கிளையெல்லாம் மலர்கள்
பூரிப்பில் கனிந்து இன்று
உன் புதல்வனாய் நிற்கின்றேன்

எனக்கான முகவரியை எழுதி
வழிமொழிந்த வள்ளல் நீங்கள்
தவறி தருதலையாய் போகாமல்
பெருகி உயர் நிலையை அடையும்
சூட்சுமத்தை உணர்த்திய
சூத்திர தாரி
நீங்கள் தான் என்றால்
நிகரில்லை ஒப்பிட

சரித்திரங்கள் காட்டி
சமத்துவத்தை ஊட்டி,
பாசத்தை கூட்டி,அறிவை புகட்டி,
ஆழுமை தீட்டி
வளர்த்த நீ எனக்கு அப்பா
வள்ளல்தான் என்று
நான் சொன்னால் தப்பா?

என்னை உன்னாய்
எப்படி செதுக்கினாய்?
பேசும் வாயெல்லாம்
பெருமையாய் சொல்லும்
உன்போல் நானென்று
உயர்வுடன் தானின்று

ஊர் மெச்சும் பெயர் வைத்தாய்
உயிர் மிச்சம் எனில் வைத்தாய்
கருணையில் நீ என்றும்
காட்டாற்று வெள்ளம் போல்
அருமையில் அப்பா உன்போல்
ஆருமில்லை ஊரிலென்பேன்!