சனி, 14 செப்டம்பர், 2013

நிசிகளை வாசிக்கிறவன்.



















பருவத்து நிலமதில் பயிர் செய்ய வந்து நீ
காதலை பூவென விதைக்கின்றாய்
பருகிடத் துடித்திடும் தாகத்தை தந்து நீ
துயில் தனை தினம்,தினம் சிதைக்கின்றாய்

விழிவழி ஏகி மனவெளி தாவி
ரகசிய அறைகளை திறக்கின்றாய்
மொழியின்றிப் பேசி புன்னகை வீசி
ரசிக்கின்ற முறைகளை தினிக்கின்றாய்

புதுமையின் பதுமைகள் தாங்கிய நவீனமாய்
கவிதையின் சுவையென இனிக்கின்றாய்
புதுப்,புது முறைகள் ஓங்கிய நளினமாய்
நினைவினில் துடித்திட பணிக்கின்றாய்

அழகிய கனவுகள் அடிக்கடி தருகின்றாய்
அடிமன உணர்வுகள் வருடி நீ திரிகின்றாய்
இளமையின் பசிகளில் பழகி நீ பிசைகின்றாய்
இளகிய நிசிகளில் விலகியேன் அசைகின்றாய்?