வியாழன், 31 மே, 2012

புன்னகை கோடி கொண்டிடும் அழகே

புன்னகை கோடி கொண்டிடும் அழகே
பொன்னகை சூடிவந்திடும் நிலவே
உனது நிழலே வாழ்வின் எல்லை
உன்னைப்போலே யாரும் இல்லை


பிறந்தாய் தேவதை போலவா
வாழர்ந்தாய் தென்றலின் மீதிலா
கலந்தாய் பூக்களில் வாசமா
இணைந்தாய் நெஞ்சினில் நேசமா
மலர்ந்தாய் ஆவணி மாசமா
புனைந்தாய் தாவணி வேஷமா

புன்னகை கோடி கொண்டிடும் அழகே
பொன்னகை சூடிவந்திடும் நிலவே...

மேனி சந்தன ஜோதியா
பூ நீ குங்கும ஜாதியா
தேவி மின்னலில் பாதியா
மண்ணில்பெண்மையின் ஆதியா
ஊரில் உன் பெயர் ராணியா
உன்னால் நானின்று ஞானியா

புன்னகை கோடி கொண்டிடும் அழகே
பொன்னகை சூடிவந்திடும் நிலவே...

ரதியே நாணமுன் பெண்மையா
விதியே நனுந்தன் பொம்மையா
விழியே நீர்த்துளி உண்மையா
விரலே நீ விட வில்லையா
மௌனம் என்னடி நீளுமா
மரணம் என்னுயிர் ஆளுமா

புன்னகை கோடி கொண்டிடும் அழகே
பொன்னகை சூடிவந்திடும் நிலவே...



மாறாத வடுக்கள்


சமுத்திரத்தை போல்
விரிந்து இருக்கிறது வடுக்கள்
இவை கயங்களில்லை,ரணங்கள்.

மீட்சியற்றதோர் அதிகாரத்தின் கீழ்
சுவடுகள் தெரியும்
வாழ்வின் எச்சங்கள் .

அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல
எதுவுமில்லை ........,
இந்த பிச்சைப்பாத்திரங்களை தவிர !