திங்கள், 1 டிசம்பர், 2014

"எழுத்து.காம்"என் எழுத்துக்கு வழங்கிய விருதும்,சான்றிதழ்களும்.

இந்தியா, தமிழ்நாடு புதுச்சேரியிலிருந்து உலகின் கோடியெங்கும் தினம் புரட்டப் படும் இணையதளமான "எழுத்து.காம்"என் எழுத்துக்கு வழங்கிய சான்றுகளை முகநூல் நண்பர்களின் பார்வைக்காக பதிவேற்றுகிறேன். இந்த விருதுகளை அக மகிழ்ந்து அனுப்பிய தோழர் பன்முக ஆளுமை அகன் என்கின்ற (அமிர்தகணேசன்)அவர்களுக்கும் இவைகளை என் வசம் கிட்ட சிரமம் பாராமல் இந்தியா இருந்து இலங்கைக்கு கொண்டு சென்று மீண்டும் நான் வசிக்கும் நாடான கத்தாருக்கு கொண்டுவந்து கையளித்த நண்பரும்,கவிஞருமான மெய்யன் நட்ராஜ் அவர்களுக்கும் இத்தருணத்தில் எத்தனை நன்றி மலர்கள் சொரிந்து வாழ்த்தினாலும் ஈடாகாது.மேலும் எழுத்து.காம் குழுமத்திற்கு கடப்பாடு உள்ளவனாய் இருப்பதில் பெருமையடைகிறேன்.அனைவருக்கும் நன்றி மலர்கள் சமர்ப்பணம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.