செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

யாதுமாகிய நீயே தாயே !


என் அசைவுகளில் நகர்கிற உயிர் நீயெடி
என் நினைவுகளில் விளைகிற பயிர் தாய் மடி 
முதல் அழுகை,முதல் சிரிப்பு,முதல் ஊண்
முதல்,முதலாய் நானறிந்த புது உலகம் தாய்

உன்னிலிருந்து பிரித்து எனக்குள் ஊற்றினாய்
உயிரை பிழிந்து பரிவை தினம் நீ காட்டினாய்
என்னை மதித்து அதிதியாய் நீ மாற்றினாய்
உன்னை உருக்கி எனக்குள் தீபம் ஏற்றினாய்

உன்போல் தாயே பாசம் ஊட்ட-இந்த 
உலகினில்  யாரும் நிகராய் இல்லையடி
உண்மையை சொன்னால் தாயே நீதான்
உயிரின் வாழ்நிலை எல்லையெடி

கண்ணின் மணிபோல் காப்பதனாலே
கருணையில் நீயொரு வள்ளலெடி-உன்
காலடி மீதினில் சொற்கம் என்றால்
பெருமையில் நீ பெரும் பெருமையடி

சந்தன ஜோதி சமரச ஜாதி தாய் நீ-என்
சாதனைக்கெல்லாம் தாயே நீயே ஏணி
உந்தன் பிள்ளை ராஜ்ஜியத்தில் நீ ராணி-என்
உயிருள்ள வரையில் சுமப்பதென் கடமை வா நீ.