அடர்வனமற்றஇருப்பின் பால் தனித்துஒற்றை கால் தவத்தில்ஒரு கடிய வாழ்வைநகர்த்திய பெண் பட்சிவற்றிய நதிகளின் எல்லைதாண்டிகுஞ்சுகளின் இரைக்காய்பாலை வெளியேகிஆட்டிடைச்சியாயும்ஊண் தேடியலைந்ததாய்கேவி அழுதிருக்கிறது என்னிடம்நான் குஞ்சாய் இருந்த வேளையதுமனசு தாளாமல்வலியோடு அழுதிருந்தேன்வேறெதற்கும் வழியற்று நானும்பின் வந்த காலங்களில்பசித்திருந்த பொழுதுகளை சேமித்துசுய அலகின் இறகுகளால்கூடும் பின்னியதுதன் குஞ்சுகளின் வாழ்வு துலங்கும்கனவுகளில் சிலிர்த்தபொழுதொன்றில்தன் ஆயுள்குளம் வற்றகணக்கு வழக்குகளை முடித்துகரை ஏறிற்றுமீட்சி பெறு கணம்எம் விழிகளில்நதிகளை திருப்பி விட்டுஇறுதி விடை வாங்கிதிரும்பி வரா திசை நோக்கிஉயிருதிர்த்திப் பறந்ததுஅவ்வெண் கொக்கு.***********கடந்த 08-03-2016 அன்று மகளிர் தினத்தில் வலியோ,வருத்தமோ இன்றி
ஓய்வெடுக்க மரணத்தின் மடியில் தலை சாய்ந்து இறையடி ஏகிய என் இளைய தாய் நினைவாக!
வியாழன், 17 மார்ச், 2016
மலைப் பூவில் அலையும்
மேக வண்ணாத்திகளின் சிறகில்
வளைகிறது நிற வாளின் கூர்”மை”
பின் அந்தி
மேல் திசையில்
மஞ்சள் சோறாக்க
கழுவி துடைத்த வான இலை
கோடை விருந்துக்கு தயாராய்
நட்சத்திரங்களின் கண் பட்டு
ஒளிரும் பிரயாசத்தில்
மின்னி திளைக்கிறது
உப்புநீர் சாலையில் பால்நிலா
சாளரத்தை சாத்தி தாளிட்டு
திரை சீலையை
இழுத்து விட்ட
இந்து சமுத்திர கடல் வீடருகில்
கோடைக்குள் தாகிக்கும் குடியிருப்புகள்
நறுமுகைகள்
பனியில் இதழ் திறக்க
கனவில் பூவுதிர்க்கும் சொற்கவனம்
வேர்படர வாடி தேய்கிறது
அந்திம மடிப்புகளில்
மழையற்ற வெம்மையில்
சமுக பதக்கடைகளின் விளைச்சல்
அமோகமாய் ஆக
சாக்குகளை நிறைக்கின்றன
வெறும் கொந்துகள்
இடைவெளியின்
இணைப்புச் சங்கிலிகள்
கண்ணறுந்து துண்டிக்க
நங்கூரம் விலக
பிடி தளரும் படகாய் அவ்வோடம்
கால காற்றின் பால்
இழுபடுகிறது இருப்பு
பாலையை சமீபித்தபடி
யாரோ விட்டுச் சென்ற
தனிமையின் அருகில் யாரோ
நீர் வற்றிய குளக்கரையில்
அலைந்திருக்கின்றன
பசித்தலைந்த பட்சியின் அலகுகள்
பெயரை எழுதி வைக்காமல் போன
எவரோ ஒருவரின் வாழ்வின் தடம்
ஈரம் காயாமல் இருக்கிறது
மழை விட்டுச் சென்ற
கோடையையும் தாண்டி!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)