ஞாயிறு, 29 ஜூலை, 2012

எரிகின்ற நெருப்பு நான்.


நீ சூடேற்றி மகிழ
புகைந்து ஊறி கனன்ற தீயாய்
உன் வருகைக்காக சாம்பலுக்குள்
புதைத்து வைத்திருந்தேன்
என் முழுமையையும்.

வாசல் திறந்து வெகு நாட்கள்....,
வரவே இல்லை நீ..
தாமதமானதை சொல்வதென்றால்
பத்தாய் கணிக்கத்தகு
இரண்டு காலங்கள் கடந்திருக்கிறது
என்னைத்தாண்டி.

இன்று காலம்,நீ
இரண்டும் எனக்கு ஒன்று போல்தான்.
ஆச்சரியப்பட தகு எந்த நிகழ்வையும்
எனக்குள் நிகழ்த்தாததால்
வாழ்தல் பற்றிய கனவோ
புணர்தல் பற்றிய நினைவோ
தற்போது துளியும் இல்லைஎன்னிடம்.

கால நிலையின் மழைக்கிற
பருவத்தில் இருக்கிறதே ஒரு கதகதப்பு
அதை சமாளிப்பதில் இருக்கும் சங்கடம்
உணர்ந்து,ஊறி உருகி கரைந்த
உணர்வெனது.

மலைகளை எரிக்கும் தாகமிருந்தும்
என்னை குளிர்ப்பிக்க இயலாமல்
தோற்றுப்  போனவனை மட்டும்
பொசிக்கி விடவென்று உமிழ்ந்தனன்று
எரிகின்ற நெருப்பு நான்.