வெள்ளி, 20 ஜூலை, 2012

புண்ணியங்களின் பூக்காலம்.



கண்ணியமான பொழுதுகள் உழுதி
புண்ணியமான நிகழ்வுகள் எழுதி
அரங்கேற்ற முஸ்லிம்கள் ஆயத்தம்
அதுதான் ரமழான் பிறை தோற்றம்
வான் கரைஎல்லார் விழியும் மாலை
வளர்பிறை தேடி அலையும் நாளை
அடுக்களை,வீடு மனம் சுத்தமாகும்
அலுமாரி திறபட கை"குர்ஆன்"தேடும்
பள்ளிகள் ஒருபடி மேலே துலங்கும்
பரிசுத்த வேதம் பூமியில் இலங்கும்.

இளையவர்,முதியவர் இருவரும் சமமென
இறைவனின் நியதியை அனைவரும் வரமென
பசியினை துறந்து நிசிகளை மறந்து 
பாவத்தை எரிக்க விறகுகள் சேர்ப்பார்
ஆபத்திலிருந்து அனைவரும் காப்பார்
அடிக்கடி வாய்கள் வேதத்தை ஓதும்
அடிப்படை கொள்கையில் மாற்றங்களேகும்
கோடிகள் சேர்த்தவன் குடிசையில் வாழ்பவன்
மாடிகள் கட்டி மன்னனாய் ஆழ்பவன்
சரிசமம் என மனம் கூறும் -நோன்பு
முடிந்த பின் முருங்கையில் ஏறும்.

நிலையினை மாற்றிட முடியும்-என்ற 
நிய்யத்து மனதினில் வைப்போம்
நிறை மனதாய் நோன்பு நோற்போம்-மறுமை
நிரந்தர வாழ்வுக்காய் உழைப்போம்
மகத்துவ நோன்பிடம் கேட்ப்போம்-பெருமை
மா நபி வழியினில் சேர்ப்போம்
புண்ணிய ஆறு  புறப்பட்டு வருது
கண்ணியத்தோடு நீ அள்ளிப்பருகு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.