என்னை திங்களென்றாய்
நுரைக்க,நுரைக்க விரும்பி
நதிகள் பெருக்கெடுக்க
மனசின் நாற்திசையும்
பிரவாகித்து பீறினாய் அன்று..
இன்று......................,
புறக்கணிப்பின் பெயரால்
மனசால் திறக்கவிருந்த
கடைசிப் படலையும்
இறுகச் சாத்திவிட்டாய்
மூச்சு முட்டுகிறது
என் காத்திருப்பின்
கடைசித் தருணங்களும் மூழ்க
வாழ்வு பற்றியதான
கனவுகளை கலைத்து விட்டன
இன்றைய உன்
நெருக்கடிகளின் பேரிரைச்சல்
வலியை மொழிய வழியின்றி
குரலை இறுக்கியபடி நாசிக்குள்
நீ மூட்டிய தீ
வேப்பிசார வெப்பம்
கனன்றெரியும் காட்டுத்தீயாய்
உயிரை சிதைக்க ஊளியென..
நம்பவைத்து ஏமாற்றுவதையும்
உலக நீதிக்குள் உட்புகுத்தி
வழக்காக்கத் தக்கதாய் சட்டம் வகுத்து
தண்டனைக்குள்ளாக்கி
புழக்கத்துக்கு கொண்டு வரவேண்டும் இனி..
இப்பவும் உன்னை சபிப்பதற்கு
மனசில்லை .....,
இதன் பின்பும் என்னிடம்
சிநேகம் இருக்கின்றன கடல்போல்
இது கனவாய் இருக்கட்டும் என்றே
பிரார்த்திக்கின்றேன்
உன்மேல் இருக்கின்ற காதலால்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.