அடர்வனமற்றஇருப்பின் பால் தனித்துஒற்றை கால் தவத்தில்ஒரு கடிய வாழ்வைநகர்த்திய பெண் பட்சிவற்றிய நதிகளின் எல்லைதாண்டிகுஞ்சுகளின் இரைக்காய்பாலை வெளியேகிஆட்டிடைச்சியாயும்ஊண் தேடியலைந்ததாய்கேவி அழுதிருக்கிறது என்னிடம்நான் குஞ்சாய் இருந்த வேளையதுமனசு தாளாமல்வலியோடு அழுதிருந்தேன்வேறெதற்கும் வழியற்று நானும்பின் வந்த காலங்களில்பசித்திருந்த பொழுதுகளை சேமித்துசுய அலகின் இறகுகளால்கூடும் பின்னியதுதன் குஞ்சுகளின் வாழ்வு துலங்கும்கனவுகளில் சிலிர்த்தபொழுதொன்றில்தன் ஆயுள்குளம் வற்றகணக்கு வழக்குகளை முடித்துகரை ஏறிற்றுமீட்சி பெறு கணம்எம் விழிகளில்நதிகளை திருப்பி விட்டுஇறுதி விடை வாங்கிதிரும்பி வரா திசை நோக்கிஉயிருதிர்த்திப் பறந்ததுஅவ்வெண் கொக்கு.***********கடந்த 08-03-2016 அன்று மகளிர் தினத்தில் வலியோ,வருத்தமோ இன்றி
ஓய்வெடுக்க மரணத்தின் மடியில் தலை சாய்ந்து இறையடி ஏகிய என் இளைய தாய் நினைவாக!
வியாழன், 17 மார்ச், 2016
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.