மாற்றி ,மாற்றி விசுக்கப்படும்
சாட்டையின்
விசையில் வலியின் ஈரம்........,
எதிர்வு
கூறுவதும் ,
நம்பி
ஏமாறுவதுமான
வானிலை அறிக்கை
வழக்கம் போல்
எனது வாழ்வும் கையாளப்படுவதுதான்
இதில்
கவலைக்குரியது ....!
நம்பிக்கையின்
வேரை
பிடுங்கி எறிந்துவிட்டது
காலம்
எனது
சொப்பனங்களில்
வாழ்வு பற்றிய
கனவே இனி வராதே...!!
எதிர்
பார்ப்புகளில் பயணித்து
இடிந்து விழ ,எழ
இதயத்தி
கால்களால் இயலவில்லை
என் இரவுகள்
வெறுமையாகவே ...,
ஏழ்மையின் அந்தப்புரத்தில்
காத்திருப்பின்
வெகுளித்தனங்களுடன்
ஆயுளின்
அரைவாசிக்குமேல்
......................................................,
இனி என்ன..
மரணம் தானே
என் வாசலுக்கு
எப்போதுவேண்டுமானாலும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.