சனி, 16 ஜூன், 2012

நக்குத்தின்னிக் காகம்.

மாம்பழக்குருவியின் அழகில்
ஒரு கொளுத்த கொக்குபோல் அது வந்தது
இப்ப அவிஞ்சவெங்காயம்.
செப்பத்தப்பாரு.
அதுர மூஞ்சியும்,மொகறையும்
'கரண்ட்'அடிச்ச வெளவாலாய் கறுத்துபோச்சு.

அவன்ட,இவன்ட எச்சிக்கு
அலையவேண்டி இருக்கு.
ஒழுங்கா இருக்க தெரியாததால
ஒன்டித்திரியுது.

சொந்தக்காற காகம்,சாச்சாமொற
என்ன பலாய்க்குத்தான் இப்படி செஞ்சிதோ
காச கொடுத்து கஷ்ட்டத்த வாங்கின கதைதான்.

பாயாத பண்டிஎண்டன்
கேட்டுதா கெழட்டுகாகம்?
'ஹறாம்'குட்டியா இப்ப அலைஞ்சி திரியுது.
சட்டப்படிவேலையும் இல்ல நல்ல
சரியாக வேளைக்கும் இல்ல திண்ண.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.