செவ்வாய், 27 நவம்பர், 2012

வெட்கமில்லா மனிதர்கள்.




விசுவாச மனிதனென்றும்
பசுவான புனிதனென்றும்
அக்கரை உள்ளவன் போல்
அவைகளை நிரப்புகின்றார்
சர்ச்சைகள் என்று வந்தால்
சபையதில் தலைமறைத்து
பச்சையாய் பொய்கள் சொல்லி
பதவியை தக்கவைப்பார்
வெட்கமே இல்லாவாறு
வெளியிலே தலைவன் என்பார்

பாமரன் போன்று பேசி
பம்மாத்து வேலை செய்யும்
கொச்சையாய் போன ஒரு
கொள்கையை வைத்துக்கொண்டு
அச்சமே இல்லாவாறு
ஆழ்கிறார் ஊரை எல்லாம்
நிச்சயம் இவர்களெல்லாம்
நீதியின் முன் நிறுத்து
தண்டனை கொடுத்து நன்று
தகுதியை களைய வேண்டும்

உத்தமன் போல பேச்சு
உளுத்தது போல சேவை
சத்திய வானைப்போல
சமுகத்தை விற்றபடி
புத்தியே கெட்டுலவும்
போலிகள் முகம் கிழித்து
வெட்கமே இல்லார் என்று
வெளியிலே காட்ட வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.