செவ்வாய், 27 நவம்பர், 2012

நம்மிலிருக்கும் இன்னொரு முகம்.




மனசுக்குள்
விஷமுள்ள பாம்புகளும்,
கொடிய மிருகங்களும்
வளர்த்தபடி
நாம் எப்போதும் 
சுயநலத்தின் வட்டத்தினுள்ளேயே
சுற்றிக்கொண்டிருக்கின்றோம்

நமக்கு தெரியாததை விட
தெரிந்தது அதிகம் என்று
தெளிந்தும் இருக்கிறோம்
பூஜ்ஜியத்தினுள் அதிகம் பொருள்
இல்லை என்பதை
இன்னும் புரியாதவர்காளாய்

வெப்பம் தகிக்கிற வேளை
நிழல்களை தரிசிக்கிறோம்
இலைகள் உதிர்கிற கணம்
வேர்களை மறந்து விட்ட படி..

கணிப்புகள் நம்மை சூழ்ந்து
சிந்திக்க வேண்டும் என்றே
முகங்களை வடிவமைத்து
வரம்புகளை மீறுவதர்க்கென்றே
கால்களை தயார் படுத்துகின்றோம்
ஒவ்வொரு முறையும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.