புதன், 19 டிசம்பர், 2012

அது வரும்...!



 ஒரு பறைவையின் இறகு 
உதிர்வது போல்
ஒரு பூவின் இதழ் விரிவது போல்
சிறு பசியில் குழந்தை
அழுவது போல்
பெரும் நிசியில் மௌனம்
நுழைவது போல்
அது வரும்

இருண்ட வானம் கலைவது போல்
மிரண்ட காளை அலைவது போல்
மூர்க்கத்தனத்தின் பிரளயத்தோடும்
பார்க்க இயலா பரபரப்போடும்
அது வரும்
தவணை கேட்க மறுத்த நொடியாய்
தலையணையோடு சரித்த படியாய்
தாலாட்டு கேட்டு சிரித்த வடிவாய்
தாயவள் வயிற்றில் தரித்த படியாய்
அது வரும்


துயரத்தின் உயரத்தையும்,
நீளத்தின் ஆளத்தையும்
வாழ்க்கையின் கோலத்தையும்
அறிந்துணர்ந்து மனிதன் ஆராய
அது வரவேண்டும்
அது வந்தால் தான்
வாழ்க்கையின் மெய்,பொய்
இரண்டையும் இனம் பிரிக்க
ஏதுவாகும் இருப்பவனுக்கும்,
மண்ணுள் செரிப்பவனுக்கும்
அதனால் அதுவரும்
நீங்கள் அழைக்காமல்
மரணம் என்னும்
மலர்செண்டு கொண்டு
உங்களை அடைய அது வரும். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.